திங்கள், 26 மே, 2014

வேலன்டைன் குறும்பாக்கள்






வேலன்டைன் குறும்பாக்கள்
======================================ருத்ரா இ.பரமசிவன்


வேலண்டைன் விண்கலம் ஏறி
"செவ்வாய்"சென்று
ஒன்று தா என்றான்.


இது சனிக்கோள் என்றாள்
தேடினான் அங்கும் இருக்குமா
ஒரு "திருநள்ளாறு"என்று.

அட்டைகள் தோறும்
பொன்னில் "பொரித்த"
இதயங்கள்.

செல்பேசிகளில்
விநாடிகள் விழுங்கின‌
கோடி ரூபாய்களை.

பொருளாதாரம் செழித்தது.
கச்சாப்பொருளும் இச்சாப்பொருளும்
காதல் காதல் காதலே

==========================================ருத்ரா
13/02/2014  06.34 காலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக