ஞாயிறு, 19 மே, 2013

நுண்பா










                                  நுண்பா 




       
                          "ருத்ராவின் குறும்பாக்க‌ள்." (1)    
                     



வம்சம்

வேரும் தெரியவில்லை.
கிளையும் தெரியவில்லை.
நிழலை தேடுகிறேன்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍======================

ஒய்

பாதை கூட‌
இந்த‌ ப‌ய‌ண‌ம
ஏன் என்று கேட்கிற‌து.

=========================

பார‌தி

"புல்லை ந‌கையுறுத்தி
பூவை விய‌ப்பாக்கி...."
க‌லிஃபோர்னியாவில் ஒரு எட்டை யபுர‌ம்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=====================================

ஒரு விளையாட்டு.

உஸ்! அப்பாடா!
மைல் க‌ல் ம‌ற‌ந்துபோன‌து.
க‌வ‌ண் க‌ல் விட‌லாமா?

==========================================

தேர்வு

காத‌லா? கத்த‌ரிக்காயா?
வாழ்க்கையின் "ஒற்றையா இர‌ட்டையா"வில்
எந்த‌ப் ப‌க்க‌ம் போவ‌து?

==========================================

ப‌ச்சை நிறமே பச்சை நிறமே

குறிக்கோள் இல்லையென்றால்
எதிர் வ‌ரும்
ப‌ச்சைப்புல்கூட‌ இருட்டு தான்.

============================================

ந‌ள்ளிர‌வில் கிடைத்தது

இன்னும் விடியவே இல்லை .
புதுக்கவிதையும்
"புராணம்"ஆகிப்போனது.




===============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக